ஆரியங்காவு அருகே நிலச்சரிவு: கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து

ஆரியங்காவு அருகே ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

Update: 2021-12-07 06:09 GMT

கேரள மாநிலம் ஆர்யங்காவு அருகே ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் திங்கட்கிழமை (06.12.2021) மாலை சென்னையிலிருந்து புறப்பட்ட கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101) செங்கோட்டை - கொல்லம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டது.

இன்று (07.12.2021) கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் (16102) கொல்லம் - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு செங்கோட்டையிலிருந்து இயக்கப்படும். மேலும் திங்கட்கிழமை அன்று புறப்பட வேண்டிய திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் திருநெல்வேலி - புனலூர் இடையே ரத்து செய்யப்பட்டது.

Tags:    

Similar News