அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு

அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார்.

Update: 2024-03-29 09:49 GMT

பொது உடமை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவி நாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.

திமுகவையும், பாஜகவையும் எதிர்க்கும் சக்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் இருப்பதாகவும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது தற்போது உள்ள வெறுப்பால் அவரது வாக்கு சதவீதம் குறையும் என பொதுவுடமை நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவிநாதன் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்து தற்போது பொதுவுடமை நாம் தமிழர் கட்சி என உருவாகியுள்ள நிலையில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவிநாதன் அதிமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்து தேர்தல் பணிகள் சம்பந்தமாக ஆலோசனை மேற்கொள்ள வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், அதிமுக கட்சிக்கு தனது கட்சி முழு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தற்போது நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்  மீது உள்ள வெறுப்பால் கடந்த முறை அவர்கள் பெற்ற வாக்கு சதவீதத்தை விட இந்த முறை பாதியாக அது குறையும் என தெரிவித்தார்.

மேலும் பாசிச பாஜக மற்றும் இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் ஈழ தமிழர்கள்  படுகொலையில் ஈடுபட்ட காங்கிரஸ், மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசு ஆகியவற்றை எதிர்க்கும் ஒரே சக்தியாக அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாகவும் அவரது கூட்டணி தான் வலுவாக இருப்பதாகவும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின்  அலை வீசுவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News