தென்காசி அருகே நடந்தது மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

தென்காசி அருகேமாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது.

Update: 2022-08-28 03:34 GMT

ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு பரிசு வழங்கினார்.

தென்காசி அருகே பாவூர்சத்திரம் செல்லும் சாலையில் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியும் சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் அசோசியேனும் இணைந்து நடத்திய மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இப்போட்டி நடைபெற்றது. பள்ளி முதல்வர் மோனிகா டிசோசா தலைமை ஏற்றார். இப்போட்டியை போக்குவரத்து காவல் ஆய்வாளர்  பிரபு துவக்கி வைத்தார்.

இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வயது அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனி சுற்றாக இப்போட்டி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்த குழு மற்றும் தனி நபர் சேம்பியன் பட்டத்தை இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியினர் பெற்றனர்.

Tags:    

Similar News