குடியரசுத் தலைவருக்கான மனுவை தென்காசி எம்எல்ஏ ஆட்சியரிடம் வழங்கினார்
தினமும் ஒரு கோடி தடுப்பூசி-குடியரசுத் தலைவருக்கான மனுவை தென்காசி எம்எல்ஏ ஆட்சியரிடம் வழங்கினார்
தினமும் ஒரு கோடி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசி எம்எல்ஏ மனு அளித்தார்.
நாடு முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசிகளை போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய குடியரசுத் தலைவருக்கான மனுவை காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மனு அளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரனிடம் காங்கிரஸ் MLA பழனி நாடார் மனு வழங்கினார். கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தகவல் #தென்காசி #எம்எல்ஏ #மனு #vaccination #Preventive #action #Tenkasi #MLA #பெட்சின் #Collector #coronaspread #coronalockdown #coronavaccine