குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2021-07-06 17:21 GMT

குற்றால அருவியில் பொதுமக்கள் குளிக்க தடையை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தொற்று பரவல் குறைந்து வருவதன் அடிப்படையில் கோயில்கள், பொதுப் போக்குவரத்து, சுற்றுலா தலங்கள் என ஆகியவற்றுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்மாவட்டத்தில் பிரதான சுற்றுலா தளமான தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் பொதுமக்கள் நீராடுவதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது சீசன் தொடங்கிவிட்டதால் குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக இருந்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குற்றால அருவிகளில் நீராட தமிழக அரசு சார்பில் எந்தவித வழிகாட்டுதலும் அறிவிக்கப்படாத நிலையில், தமிழக அரசு வழங்கும் வழிகாட்டுதல் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News