பாவூர்சத்திரம் - திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் திமுகவினர் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பாவூர்சத்திரம் பகுதியில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் 300 ஆட்டோ ஒட்டுநர்களுக்கு நிவாரன பொருட்கள் வழங்கப்பட்டது.