காவடி சிந்து கவிராயருக்கு மணி மண்டபம் அமைக்க கோரிக்கை

காவடி சிந்து கவிராயர் அண்ணாமலையாருக்கு சொந்த ஊரில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் விளாத்திகுளம் எம் எல் ஏ சின்னப்பன் முதல்வருக்கு கோரிக்கை.

Update: 2021-02-12 16:52 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சென்னி குளத்தில் காவடி சிந்தின் தந்தை என அழைக்கப்படும் அண்ணமாலையரின் 130 வது நினைவு தினைத்தையொட்டி அக்கிராம மக்கள் இன்று காலை முதல் இரவு வரை அவர் பாடிய காவடி சிந்து, பாடல்களை பாடியும், பெண்கள் கும்பி அடித்தும் கவிராயரின் நினைவை போற்றினர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன் தமிழில் மிக சிறப்பான பாடல்களை பாடி தமிழுக்கு பெருமை சேர்த்தவர் எனவும், இவர் பாடிய காவடி சிந்து பாடல்கள் இன்றளவும் அனைவராலும் விரும்பி கேட்கபடுகிறது எனவும் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இச்சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருவது காவடி சிந்து கவிராயர் பிறந்த சென்னிகுளத்தில் தமிழக அரசு மணி மண்டபம் கட்டவேண்டும். அது குறித்து முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

Similar News