பாவூர்சத்திரம் அருகே கல்லால் அடித்து வாலிபர் கொலை - காவல்துறையினர் விசாரணை

பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் ஊர் அருகே ஒரு தனியார் தோட்டத்தில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Update: 2020-12-14 17:53 GMT



தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சுடலைமணி (எ) மணிகண்டன் பாவூர்சத்திரத்தில் மட்டன் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை முடித்து ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில்திங்கள் கிழமை காலையில் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் ஊர் அருகே ஒரு தனியார் தோட்டத்தில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் மற்றும் டிஎஸ்பி பொன்னிவளவன் மற்றும் பாவூர்சத்திரம்காவல்துறை அதிகாரிகள் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர். ஏதேனும் முன் பகையா? அல்லது மது போதை தகறாறா ? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


Similar News