குறைதீர்க்கும் நாள் முகாமில் இலவசமாக மனு எழுதிக்கொடுப்பதற்கு வரவேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாளில் இலவசமாக மனு எழுதிக்கொடுப்பதற்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்து உள்ளது.

Update: 2021-11-03 11:06 GMT

சிவகங்கை மாவட்டத்தில் நேரு யுவகேந்திரா அமைப்பினர் பொதுமக்களுக்கு இலவசமாக மனு  எழுதி கொடுத்தனர்.

கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அந்தந்த ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் முதல் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகையை, வங்கிக்கடன் மூலம் பண உதவி தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல் ,குடும்ப அட்டை கோருதல், உள்ளிட்ட மத்திய நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு நேரு யுவகேந்திரா சார்பில் இலவசமாக மனு எழுதி கொடுப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Tags:    

Similar News