வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் -வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது

Update: 2022-05-28 08:47 GMT

வடசென்னை அனல் மின்நிலையம்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் முதல் யூனிட்டில் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதனை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News