நாமக்கல்லில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைப்பு

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-03-22 13:30 GMT

நாமக்கல்லில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஸ்யோசிங் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரின் தரத்தை தரப்பரிசோதனைப் பெட்டி மூலம் பரிசோதனை செய்யும் செயல் முறை விளக்கம் நடைபெற்றது. மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் களநீர் தரப்பரிசோதனைப் பெட்டி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ கதிரேசன், டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, தமிழ்நாடு குடிநீர் வாரிய செயற்பொறியாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News