எருமப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
எருமப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் முத்தையா (53), கூலித்தொழிலாளி. இவர் தனது சொந்த வேலை காரணமாக கஞ்சம்பட்டிக்கு டூ வீலரில் சென்று கொண்டிருந்தார்.
கஸ்தூரிபட்டி புதூர் அருகே அவர் சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் வாகனம், டூ வீலர் மீது மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தையா உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.