நாமக்கல் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

முதல்கட்ட விசாரணையில் மகளின் திருமணம் தொடர்பாக கணவனர், மனைவிககும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் என தெரிய வந்துள்ளது.

Update: 2022-05-26 10:00 GMT

பைல் படம்.

நாமக்கல் அருகே உள்ள ஆவல்நாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் வரதராசு. இவருடைய மனைவி கஸ்தூரி (41). சம்பவத்தன்று மாலை வீட்டில் தனியாக இருந்த கஸ்தூரி கழுத்தில் தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியல் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கஸ்தூரி உயிரிழந்தார். இது குறித்து, வரதராசு நாமக்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் மகளின் திருமணம் தொடர்பாக கணவனர், மனைவிககும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், மனமுடைந்த கஸ்தூரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News