நாமக்கல் நகராட்சியைக் கண்டித்து வரும் 15ம் தேதி காத்திருப்பு போராட்டம்

நாமக்கல் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வருகிற 15ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

Update: 2022-09-04 02:30 GMT

பைல் படம்

சாக்கடை கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்று, நாமக்கல் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வருகிற 15ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து விவசாயிகள் முன்னேற்றக்கழக தலைவர் செல்லராஜாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் நகராட்சிப் பகுதியில் இருந்து வெளியேறும், சாக்கடை கழிவுநீர் சுத்திகரிக்கப் படாமல் நேரடியாக லக்கமநாயக்கன்பட்டி, சிவியாம்பாளையம், சாலப்பாளையம், அலங்காநத்தம், வீசாணம், துசூர், வேட்டாம்பாடி, முத்துகாப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது.

இந்த தண்ணீர் அப்பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஓடை புறம்போக்கு, நீர்வழிப் பாதைகள், கிணறுகள், விவசாய நிலங்கள்,மற்றும் ஏரிகளுக்குச் செல்கிறத. இதனால் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு, அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், நீரை குடிப்பதற்கு பயன்படுத்த முடியவில்லை. மேலும், கால்நடைகளுக்கு குடிநீராக பயன்படுத்த முடியவில்லை. மாசுபட்ட தண்ணீரில் துணி துவைப்பதற்கு கூட முடியாமல் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று ஆண்டுகளாக நாமக்கல் நகராட்சி கழிவுநீரை தொடர்ந்து இந்தப் பகுதிகளுக்கே விடப்படுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் நோய்வாய்ப்பட்டு, தங்களது தோல் மற்றும் கால்களில் அரிப்பு ஏற்படுவதோடு , கால்நடைகள் இறக்கும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது. அதோடு பல்வேறு சுகாதார சீர்கேடுளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

நாமக்கல் நகராட்சியில் இருந்து கழிவு நீர் வெளியேற்றுவது சம்பந்தமாக பல முறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே இப்பிரச்சினையை, தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்வதற்காக வருகின்ற 15ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல், நாமக்கல் நகராட்சி அலுவலகத்தின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. விவசாய முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், கழிவுநீரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் சார்பாகவும் நடைபெறும் இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News