தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கூட்டமைப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை
தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கூட்டமைப்பினர் நாமக்கல் மவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது-:
கள்ளிக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ,தனியார் பள்ளியில் சமூக விரோதிகள் புகுந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அனைத்து தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் கவலை அடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில் தனியார் பள்ளி நிறுவன வளாகத்தில் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்கவும், உரிய சட்டப் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.