மோகனூர் அசல தீபேஸ்வரர் கோயிலில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் ஆனி மாத பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Update: 2022-07-12 02:45 GMT

ஆனி மாத பிரதோசத்தை முன்னிட்டு, மோகனூர் அசல தீபேஸ்வரர் கோயிலில் உள்ள நந்திக்கு பாலபிசேகம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி கரையில் பிரசித்திபெற்ற அசல தீபேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆனி மாத வளர்பிறை பிரதோசத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

மாலை நந்திபகவானுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சள், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News