நாமக்கல்: 11 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கிய கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 11 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-03-28 13:30 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், 11 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். கூட்டத்தில், பொதுமக்கள் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 11 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை கலெக்டர் வழங்கினார்.

மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 329 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் 11 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டுகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 36 பயனாளிகளுக்கு ரூ.5.55 லட்சம் மதிப்பில் சிறுதொழில் தொடங்கிட நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார். தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ கதிரேசன், சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் ரமேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மோகனசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News