நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது
நாமக்கல்லில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் கடைவீதியில், பழைய இரும்பு கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, நாமக்கல் எஸ்.பி சரோஜ்குமார் தாகூருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், நாமக்கல் அற்றப்பிரிவு எஸ்.ஐ சங்கீதா தலைமையில், எஸ்.எஸ்.ஐ. அருணாசலம் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது, குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அனுமதியின்றி தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த குட்டைத்தெருவைச் சேர்ந்த ஜாகீர்உசேன் (50) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 30 கிலோ எடையுள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.