ஆந்திராவில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் ரேஷன் அரிசி வருகை

ஆந்திராவில் இருந்து நாமக்கல்லுக்கு, சரக்கு ரயில் மூலம், 2,600 டன் ரேஷன் அரிசி வந்துள்ளது.

Update: 2021-12-27 02:15 GMT

கோப்பு படம் 

இந்திய உணவு கழகத்தின் மூலம்,  ஆந்திர மாநிலத்தில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அரிசி மூட்டைகள் 140 லாரிகளில் ஏற்றப்பட்டு நாமக்கல்- திருச்செங்கோடு ரோட்டில் உள்ள சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் குடோனுக்கும், புதுப்பட்டியில் உள்ள இந்திய உணவு கழகத்தின் குடோனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் டவுன் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News