கவிஞர் ராமலிங்கம் பிறந்தநாள், பாரதியார் விருது வழங்கும் விழா

மோகனூரில், நாமக்கல் கவிஞர் பிறந்தநாள் விழா மற்றும் பாரதியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2021-10-21 02:15 GMT

மோகனூரில் நடைபெற்ற விழாவில், நூலக சேவைக்காக மின்வாரிய பொறியாளர் ராணிக்கு, பாரதியார் விருது வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் கிளை நூலகத்தில், நூலக நண்பர்கள் சார்பில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை பிறந்தநாள் விழா, பாரதியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஓய்வுபெற்ற வட்டார மருத்துவ அலுவலர் கருணாநிதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் பழனிசாமி, பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார், லயன்ஸ் சங்கத் தலைவர் பிரதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மாவட்ட நூலக வாசகர் வட்ட பொருளாளர் ராஜவேல், மின்வாரிய பொறியாளர் ராணி, விவேக் ஆகியோருக்கு, நூலக சேவையைப் பாராட்டி பாரதியார் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், டாக்டர் சங்கரி அஸ்வின், ரம்யா ஆகியோர் நூலகத்துக்கு, தலா ரூ.9,000 மதிப்புள்ள புத்தக அலமாரிகளை வழங்கினர். வாசகர் வட்ட தலைவர் கோபால், தலைமையாசிரியர் சத்தியமூர்த்தி, வெற்றித்தமிழர் பேரவை உறுப்பினர்கள் நாராயணசாமி, அமல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News