நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியம் சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில், மின்சார வாரியத்தின் சார்பில் மாதாதந்திர குறைதீர் முகாம்கம் நடைபெற உள்ளன.

Update: 2022-05-02 10:30 GMT

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு மின்சார வாரிய, நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில், மே மாதத்திற்கான மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி 4ம் தேதி புதன் கிழமை, மாலை 3 மணிக்கு, நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 11ம் தேதி புதன்கிழமை, மாலை 3 மணிக்கு, பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 18ம் தேதி புதன்கிழமை, மாலை 3 மணிக்கு, திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 25ம் தேதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. கோரிக்கை மனுக்களை அளிக்க விரும்பும் மின் நுகர்வோர் சம்மந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், நேரடியாக மனு அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News