நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இயற்பியல் கருத்தரங்கம்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2022-04-12 11:30 GMT

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இயற்பியல் கருத்தரங்கில், ராசிபுரம் அரசு கலைக்கல்லூரி இணை பேராசிரியர் பிரிசில்லா ஜெயகுமாரி பேசினார்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை கருத்தரங்கம் நடைபெற்றது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, இயற்பியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் (பொ) பாரதி தலைமை வகித்தார். ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் பிரிசில்லா ஜெயகுமாரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கண்கவர் இயற்பியலில் வெற்றி பெற்றவர்கள் என்ற தலைப்பில் பேசினார்.

நிகழ்ச்சியில் இயற்பியல் துறைத்தலைவர் (பொ) சித்ராதேவி உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். முடில் மாணவியரின் குவிஸ் போட்டி, பட்டிமனறம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags:    

Similar News