நாமக்கல்லில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளுக்கு அனுமதியில்லை: போலீசார் அறிவிப்பு

நாமக்கல் பஸ்ஸ்டாண்டில் இரவு 11 மணிக்கு மேல் கடைகள் செயல்பட அனுமதியில்லை. போலீஸ் துறை அறிவிப்பு.

Update: 2022-02-02 00:30 GMT

நாமக்கல் பஸ்ஸ்டாண்டில் இரவு 11 மணிக்கு மேல் கடைகள் செயல்பட அனுமதியில்லை என போலீஸ் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் தெரிவித்திருப்பதாவது:- இரவு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இரவு 11 மணிக்கு மேல் நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள, எல்லாவிதமான கடைகளும் செயல்பட அனுமதி இல்லை.

குறிப்பாக இரவு 11 மணிக்கு செயல்படும் பேக்கரி மற்றும் டீ கடைகளையும் கண்டிப்பாக மூட வேண்டும். அறிவிப்பை மீறி செயல்படும் கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். எனவே வணிக பெருமக்கள் போலீஸ் துறையின் அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News