தேசிய ரத்த தான தின விழிப்புணர்வு பேரணி: லெக்டர் துவக்கி வைப்பு

தேசிய ரத்த தான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

Update: 2022-10-01 11:30 GMT

தேசிய ரத்த தான தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில், தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்த தான விழிப்புணர்வு பேரணி துவக்க விழா நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற பேரணி மீண்டும் ஆஸ்பத்திரியில் முடிவடைந்தது. பின்னர், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி மற்றும் டாக்டர்கள், நர்சுகள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News