பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Update: 2021-07-08 13:00 GMT

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் டாக்டர் செழியன் துவக்கி வைத்தார். அருகில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக்.

இந்தியா முழுவதும் நாள்தோறும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விலை உயர்வைக் கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நாமக்கல் மோகனூர் ரோட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு,  மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் டாக்டர் செழியன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் வீரப்பன், சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன், மாநில ஓபிசி பிரிவு துணைத்தலைவர் டாக்டர் செந்தில், கொல்லிமலை வட்டார காங்கிரஸ் தலைவர் குப்புசாமி, வள்ளிபுரம் ரகு, தாஜ், பொன்முடி, குமார், அருணகிரி, ஸ்டாலின், சாந்திமணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News