நாமக்கல்லில் இன்று 914 பேருக்கு கொரோனா- 14 பேர் பலி

நாமக்கல் மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 914 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரேநாளில் 14 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-06-01 15:24 GMT

கோப்பு படம்

நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, ப.வேலூர், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 914 பேருக்கு, இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், பெருந்துறை, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர்.

மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33,210 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 25,663 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 7,285 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 14 பேர் இறந்தனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News