நாமக்கல்லை மிரட்டும் கொரோனா: 695 பேருக்கு பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

Update: 2021-05-27 04:14 GMT

நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, ப.வேலூர், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 695 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், பெருந்துறை, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர். அளிக்கப்படுகிறது.

இதன் மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,792ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி நேற்று 5 பேர் இறந்தார். மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News