நாமக்கல்: இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் டாஸ்மாக் ஊழியர் உயிரிழப்பு

நாமக்கல் அருகே, கார் மோதியதால் டூ வீலரில் சென்ற டாஸ்மாக் விற்பனையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-03-01 10:45 GMT

நாமக்கல் அருகே, கார் மோதியதால் டூ வீலரில் சென்ற டாஸ்மாக் விற்பனையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் முதலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). இவர் நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவர் சம்பவத்தன்று இரவு புதன்சந்தையில் இருந்து நாமக்கல் நோக்கி டூ வீலரில் வந்து கொண்டிருந்தார். பாப்பிநாயக்கன்பட்டி அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த கார், அவரது டூ வீலரில் மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக் காக அவரை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News