நாமக்கல்லை அச்சுறுத்தும் கொரோனா - ஒரே நாளில் 801 பேருக்கு பதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில், நேற்று ஒரேநாளில் 801 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,005 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-06-04 02:44 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  நேற்று நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட அனைவரும், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பெருந்துறை, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில்உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,816 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 27,023 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 7,512 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று 10 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை, 281 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News