நாமக்கல் மாவட்டத்தில் 26 தாசில்தார்கள் இடமாற்றம் : கலெக்டர் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் 26 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-07-11 03:15 GMT

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 26 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் தாசில்தார் தமிழ்மணி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அதில் பணியாற்றிய ருக்குமணி, அதே துறையில் திருச்செங்கோட்டுக்கும், திருச்செங்கோடு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தங்கராசு மோகனூர் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குமாரபாளையம் தாசில்தார் தங்கம் திருச்செங்கோடு ஆர்டிஓவின் நேர்முக உதவியாளராகவும், அங்கு பணியாற்றிய சுப்ரமணியம் நாமக்கல் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய திருமுருகன் நாமக்கல் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராசிபுரம் தாசில்தார் ராஜேஸ்கண்ணா நாமக்கல் ஆர்டிஓவின் நேர்முக உதவியாளராகவும், அங்கு பணியாற்றிய ராஜகோபால் நாமக்கல் பைபாஸ் ரோடு நில எடுப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய செந்தில்குமார் பரமத்திவேலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லிமலை தாசில்தார் ராஜ்குமார் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், திருச்செங்கோடு பைபாஸ் ரோடு நிலம் எடுப்பு திட்ட தனி தாசில்தார் தமிழரசி குமாரபாளையம் தாசில்தாராகவும், மோகனூர் தாசில்தார் பாஸ்கர் நாமக்கல் கலெக்டர் அலுவலக ஆதிதிராவிடர் நலத் துறை தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல மாவட்டத்தில் மொத்தம் 26 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News