நாமக்கல் 34வது வார்டு பாஜக வேட்பாளரை ஆதரித்து நகர தலைவர் சரவணன் பிரச்சாரம்

நாமக்கல் 34வது வார்டு பாஜக வேட்பாளர் சிலம்பரசனுக்கு ஆதவராக நகர பாஜ தலைவர் சரவணன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

Update: 2022-02-14 02:00 GMT

நாமக்கல் நகராட்சி 34வது வார்டு பாஜக வேட்பாளர் சிலம்பரசனுக்கு ஆதவராக, நகர பாஜ தலைவர் சரவணன், வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் 34 வது வார்டு பாஜக வேட்பாளர் சிலம்பரசனுக்கு ஆதரவாக, நகர பாஜக தலைவர் சரவணன் வீடு, வீடாகச் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

நாமக்கல் முல்லைநகர், அன்பு நகர், அழகு நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நகராட்சி 34 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பாஜக சார்பில் சிலம்பரசன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நகர பாஜக தலைவர் சரவணன் அப்பகுதியில் வீடு வீடாகச்சென்று பொதுமக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் நடைபெறவும், புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி அமைக்கவும், ரோடு வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறவும் பொதுமக்கள் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பாஜக மாவட்ட செயலாளர் வசந்தி, எஸ்.சி பிரிவு பொறுப்பளார் வேலு, நகர துணைத்தலைவர் சின்னுசாமி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News