நாமக்கல் அருகே கட்டுமானப் பணியில் தவறி விழுந்த மேஸ்திரி உயிரிழப்பு

Accident In Tamil - நாமக்கல் அருகே கட்டுமானப் பணியின்போது தவறி கீழே விழந்த மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-05 03:00 GMT

பைல் படம்.

Accident In Tamil - நாமக்கல் அருகே உள்ள திண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பார்த்தசாரதி (45) மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பணியின் போது பார்த்தசாரதி கால்தவறி கீழே விழுந்தார். இதனால் பலத்த காயமடைந்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி தங்கமணி நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News