சேந்தமங்கலம் அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை: ஒருவர் கைது
சேந்தமங்கலம் அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி, சேந்தமங்கலம் தாசில்தார் சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொண்டப்பநாயக்கன்பட்டியில் இருந்து புதன்சந்தை செல்லும் பகுதியில் தகர கொட்டகை அமைத்து கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜா என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 47 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.