நாமக்கல்: உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 9ம் தேதி பொதுவிடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில், வரும் 9ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-07 02:45 GMT

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் வட்டாரத்தில், மாவட்ட ஊராட்சி 6வது வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளதால் வெண்ணந்தூர் வட்டாரம் முழுவதும் 9ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

எருமப்பட்டி வட்டாரத்தில் வார்டு எண் 15க்கான ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் வாழவந்தி, செவ்வந்திப்பட்டி மற்றும் வடவாத்தூர் பஞ்சாயத்துப் பகுதிகளில் நடைபெறுகிறது. கோனங்கிப்பட்டி கிராம பஞ்சாயத்து மற்றும் பவித்திரம் கிராம பஞ்சாயத்து, கபிலர்மலை வட்டாரம் கோப்பனம்பாளையம் பஞ்சாயத்து, பரமத்தி வட்டாரம் கூடச்சேரி பஞ்சாயத்து, கொல்லிமலை வட்டாரம் தின்னணனூர் நாடு பஞ்சாயத்து, மோகனூர் வட்டாரம் என்.புதுப்பட்டி பஞ்சாயத்து, நாமகிரிப்பேட்டை வட்டாரம் கார்கூடல்பட்டி, திம்மநாய்க்கன்பட்டி, பெரப்பன்சோலை. மங்களபுரம் பஞ்சாயத்துக்கள். புதுச்சத்திரம் வட்டாரம் காரைக்குறிச்சிப்புதூர், எஸ்.உடுப்பம், திருமலைப்பட்டி பஞ்சாயத்துகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே, அப்பகுதிகள் முழுமைக்கும், வரும் 9ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News