நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள் நிகழ்ச்சி

நாமக்கல்லில் மறைந்த இந்தியப் பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2022-05-27 05:30 GMT

மறைந்த பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல்லில் மறைந்த இந்தியப் பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மறைந்த இந்தியப்பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல் நேரு பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில்,நகர காங்கிரஸ் தலைவர் மோகன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரப்பன், மாநில ஓபிசிபிரிவு துணை த்தலைவர் டாக்டர் செந்தில், கொல்லிமலை வட்டார காங்கிரஸ் தலைவர் குப்புசாமி, முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், ஸ்டாலின், சாந்தி மணி, மணிவண்ணன், செல்வம், சிவாஜி மன்றம் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News