நாமக்கல்லில் வரும் 27ம் தேதி நாற்றாங்கால் முறையில் மீன் குஞ்சு வளர்ப்பு பயிற்சி

நாமக்கல்லில் வரும் 27ம் தேதி நாற்றாங்கால் முறையில் மீன் குஞ்சு வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-01-20 11:00 GMT

கோப்பு படம் 

நாற்றாங்கால் முறையில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு குறித்து நாமக்கல்லில் வருகிற 27ம் தேதி இலவச பயிற்சி நடைபெறுகிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 27ம் தேதி காலை 10 மணிக்கு நாற்றாங்கால் முறையில் மீன்குஞ்சுகள் வளர்ப்புமற்றும் மேலாண்மை என்றதலைப்பில் ஒருநாள் இலவசப் பயிற்சி நடைபெறஉள்ளது.

இப்பயிற்சியில் வளர்ப்பிற்கான மீன் பண்ணைக் குட்டை அமைக்க இடம் தேர்வுசெய்தல், வளர்ப்பிற்கேற்ற மீன் குஞ்சுகள், இயற்கை மற்றும் செயற்கை உணவு உற்பத்திற்கான தொழில் நுட்பங்கள், நீர் மேலாண்மை,பிரதமரின் மீன் வளமேம்பாட்டுத் திட்டங்கள், மற்றும் விவசாய கடன் அட்டை வழங்கும் திட்டம் ஆகியவை உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்பங்களும் இப்பயிற்சியில் விரிவாக கற்றுத் தரப்படும்.

பயிற்சியில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள்,  வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என நிலைய தலைவர் ஷர்மிளா பாரதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News