மத்திய அரசுக்கு எதிராக நாமக்கல்லில் திமுக, கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து, நாமக்கல்லில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-20 07:45 GMT

மத்திய அரசைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு, மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்ட ங்களை ரத்து செய்யக்கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும், பெட்ரோல், டீசல் கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட, மத்திய அரசின் ஜனநாயக விரோதப்போக்கை கண்டித்தும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொமதேக மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், விசிக மணி மாறன், ராஜாமுகமது, அகதுல்லா, தவுலத்கான், மதிமுக பழனிசாமி, திமுக நிர்வாகிகள் மணிமாறன், ராணி, ராணா ஆனந்த், சிவகுமார், பூபதி, சரவணன் உள்ளிட்ட திரளானவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News