நாமக்கல்லில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

நாமக்கல் டவுன் பஸ் நிலையம் அருகில், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-21 02:30 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி பேசினார். அருகில் எம்எல்ஏ ராமலிங்கம்.

நாமக்கல்லில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் டவுன் பஸ் நிலையம் அருகில்,  திமுக அரசின், ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகராட்சித் துணைத்தலைவர் பூபதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலை வகித்து, கடந்த ஒரு ஆண்டில் நாமக்கல் பகுதிக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

கட்சியின் பேச்சாளர்கள் மாநில இலக்கிய அணி அமைப்பாளர் கவிதைப்பித்தன், செந்தூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், நகராட்சித் தலைவர் கலாநிதி, மாநில திமுக நிர்வாகிகள் மணிமாறன், ராணி, மாவட்ட அவைத்தலைவர் உடையவர் நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், பாலசுப்ரமணியம், நவலடி, திமுக பிரமுகர்கள் மாயவன், ராஜகோபால் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News