கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் உதவி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் வாரிசுகள், தமிழக அரசின் நிவாரண உதவி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின், குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரண உதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு வெப்சைட் முகவரியில் எக்ஸ்கிரேஷியாஃபர்கோவிட்19 என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம் என தெரிவித்துள்ளார்.