நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நாளை 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி
நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நாளை 4 மையங்களில் கோவிஷீல்டு முதல் மற்றும் இண்டாம் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நாமக்கல் நகராட்சி 3, 4, 9, 10 வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு ராமாபுரம்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தடுப்பூசி போடப்படுகிறது.11, 13, 14 வார்டுகளைச்சேர்ந்தவர்களுக்கு மெயின் ரோட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தடுப்பூசி போடப்படும். 21, 22, 24, 25, 3 1, 34 வார்டுகளில் வசிப்போருக்கு துறையூர் ரோட்டில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. 38, 39ம் வார்டுகளில் உள்ளவர்களுக்கு கொண்டிசெட்டிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தடுப்பூசி செலுத்தப்படும். மொத்தம் 1,800 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.