இலவச வீட்டுமனை கேட்டு கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இலவச வீட்டுமனைக்காக இடம் வழங்கக்கோரி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-06 11:15 GMT

நாமக்கல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூ., கட்சியினர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எலச்சிபாளையம் ஒன்றிய துணைத்தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் யுவராஜ், வெங்கடேஷ், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவேல் துவக்கி வைத்தார். இதில் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் பெரியமணலி பகுதியில் உழைக்கும் மக்கள் இலவச வீட்டு மனைக்கான நிலம் வேண்டி கடந்த 2019ம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்து வீட்டுமனைக்கு நிலம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் அன்புமணி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். முடிவில் மாவட்ட செயலாளர் குழந்தான் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News