நாமக்கல்லில் கிறிஸ்து அரசர் பெருவிழா: எம்எல்ஏ ராமலிங்கம் பங்கேற்பு
நாமக்கல் கிறிஸ்துவ தேவாலயத்தில் நடைபெற்ற விழாவில் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு பேசினார்.
நாமக்கல் திருச்சி ரோட்டில், போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள தேவாலயத்தில், கிறிஸ்து அரசர் பெருவிழா நடைபெற்றது. ஆயர் டாக்டர் அருள்செல்வன் ராயப்பன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அவருக்கு திருச்சபை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாமக்கல் நகர திமுக பொறுப்பாளர்கள் பூபதி, ராணா ஆனந்த், மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன், மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் ராணி, மாநில சட்ட திருத்த குழு உறுப்பினர் நக்கீரன், நகர பொறுப்பு குழு உறுப்பினர் சரவணன், பிராபாகரன், உமாசங்கர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.