நாமக்கல் அருகே ரேசன் அரிசி கடத்திய ஆட்டோ பறிமுதல்: டிரைவர் கைது
நாமக்கல் அருகே 2 டன் ரேசன் அரிசியை கடத்தி வந்த ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து, அதன் டிரைவரை கைது செய்தனர்.
நாமக்கல் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அகிலன் மற்றும் காவல்துறையினர், நாமக்கல் தனித்துணை வட்டாட்சியர் ஆனந்தன், தனி வருவாய் ஆய்வாளர் சியாம்சுந்தர் ஆகியோருடன், சேந்தமங்கலம் தாலுக்கா, வரகூர் பஸ் ஸ்டாப் அருகில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தலா 50 கிலோ எடை கொண்ட 42 பிளாஸ்டிக் சாக்குமூட்டைகளில் சுமார் 2100 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையொட்டி ஆட்டோவை ஓட்டிவந்த, பவித்திரம்புதூரைச் சேர்ந்த டிரைவர் அன்பரசன் (31) என்பவரை கைது செய்து ரேசன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.