பால் லாரி மோதி டூ வீலரில் சென்ற தச்சு தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல் அருகே மேட்டுப்பட்டியில், பால் லாரி மோதி டூ வீலரில் சென்ற தச்சு தொழிலாளி உயிரிழப்பு

Update: 2022-04-08 07:30 GMT

நாமக்கல் அருகே உள்ள, மேட்டுப்பட்டி அகதிகள் முகாமில் வசிப்பவர் இந்திரன் (33). தச்சு தொழிலாளி. இவருடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று இந்திரன், நாமக்கல் சென்று மகளைப் பார்த்து விட்டு மீண்டும் மேட்டுப்பட்டி அகதிகள் முகாமுக்கு தனது டூ வீலரில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது மேட்டுப்பட்டி அருகே தொட்டியத்தில் இருந்து,  நாமக்கல் நோக்கி சென்ற பால் லாரி டூ வீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இந்திரன்,  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News