நாமக்கல்லில் வரும் 30ம்தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் வரும் 30ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2021-11-26 10:30 GMT

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் சமையல் கேஸ் நுகர்வோர் நலன் கருதி அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவன ஏஜெண்டுகள், சமையல் கேஸ் விநியோகஸ்தர்கள், சமையல் கேஸ் நுகர்வோர் ஆகியோர்களுடன் சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகிக்கிறார். சமையல் கேஸ் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை எழுத்து வடிவில் இரண்டு பிரதிகள் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News