நாமக்கல்லில் வரும் 29ம் தேதி தபால்துறை குறைதீர் கூட்டம்

நாமக்கல் கோட்ட தபால்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் நாள் வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது.

Update: 2022-03-20 12:30 GMT

பைல் படம்.

நாமக்கல் கோட்ட தபால்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் நாள் வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் தபால்தறை கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்ட அளவிலான தபால்துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் நாள் வருகிற 29ம் தேதி மாலை 3 மணிக்கு, நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தபால் துறை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சேவை பெறுவதில் குறைகள் ஏதேனும் இருப்பின், தங்களது புகார்களை அஞ்சலக கண்காணிப்பாளர், நாமக்கல் கோட்டம், நாமக்கல் - 637001 என்ற முகவரிக்கு, வரும் 28ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும். புகார் அனுப்பும் தபால் உறையின் மீது அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் மனு சம்மந்தமாக என்று எழுதப்பட வேண்டும்.

குறைத்தீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு புகார்கள் தெரிவிக்க விரும்பினால், நேரடியாகவும் கலந்து கொள்ளலாம். புகார் கடிதத்தில் முழுத் தகவல்களும் குறிப்பிடப்பட வேண்டும். அதாவது அனுப்பும் முகவரி, அனுப்பிய முகவரி, ரெஜிஸ்டர் தபால் / ஸ்பீடு போஸ்ட் / மணியார்டர் எண், எந்த அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டது மற்றும் அனுப்பப்பட்ட தேதியையும் குறிப்பிட வேண்டும். புகார்கள் சேமிப்பு கணக்கில் (அ) அஞ்சள் ஆயுள் இன்சூரன்ஸ் சம்மந்தமாக இருப்பின், அதன் அக்கவுண்ட் நம்பர் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News