சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய 2 பேர் போக்சோவில் கைது

நாமக்கல் மாவட்டத்தில், குழந்தை திருமணம் செய்த 2 பேர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-01-08 00:45 GMT

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், திருமலைப்பட்டி அடுத்த இடையப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் கபிநாத் (20) என்பவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வருவதாக சைல்டு லைன் அமைப்பின் 1098 என்ற தொலைபேசி எண் மூலம் புகார் வந்தது. கலெக்டர் உத்தரவின் பேரில், நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி, இது குறித்து வழக்குப்பதிவு செய்து,  கபிநாத்தை போக்சோ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

* திருச்செங்கோடு தாலுக்கா, வட்டூரை அடுத்த மோர்பாளையத்தை சேர்ந்த 18 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை, குழந்தை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாக புகார் வந்தது. இதையொட்டி, திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 18 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News