குமாரபாளையம் மயான வளாகத்தில் தியான மண்டபம் அமைக்கும் பணிகள் தீவிரம்
Dhyana Mandapam in the Kumarapalayam cemetery complex
குமாரபாளையம் மயான வளாகத்தில் 30 லட்சம் மதிப்பில் தியான மண்டபம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் கூறியதாவது: நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 30 லட்சம் மதிப்பில், குமாரபாளையம் நகராட்சி மயான வளாகத்தில் தியான மண்டபம் கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இது அரசு சார்பில் 50 சதவீதமும், மயானத்தை பராமரித்து வரும் ரோட்டரி சங்கம் சார்பில் 50 சதவீத பங்களிப்புடனும் செயல்படுத்தப்படுகிறது. இதன் பணிகள் துரிதமாக நடைபெற்று விரைவில் தியான மண்டபம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று அவர் கூறினார்.