குமாரபாளையம் கவிஞருக்கு பிறந்த நாள் கொண்டாடிய தமிழ் ஆர்வலர்கள்

குமாரபாளையம் கவிஞருக்கு தமிழார்வலர்கள் பிறந்த நாள் கொண்டாடினர்.

Update: 2022-06-30 12:15 GMT

குமாரபாளையம் கவிஞர் மல்லை ராமநாதனுக்கு தமிழார்வலர்கள் பிறந்த நாள் கொண்டாடினர்.

குமாரபாளையம் கவிஞர் மல்லை ராமநாதன் பல இலக்கிய படைப்புகள், கவிதை தொகுப்புகள் படைத்ததுடன் பல பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், கவியரங்கங்கள் நடத்தியுள்ளார்.

இவரது பிறந்த நாளான நேற்று மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் முன்பு குமாரபாளையம் தமிழார்வலர்கள் பலரும் பங்கேற்று பொன்னாடை அணிவித்து, கேக் வெட்டி வாழ்த்தியதுடன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் நிர்வாகிகள் அன்பழகன், ராஜ்குமார், பிரகாஷ், தி.மு.க. கவுன்சிலர் ராஜ், ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News