குமாரபாளையத்தில் செங்குந்த சமுதாய முப்பெரும் விழா

குமாரபாளையத்தில் செங்குந்த சமுதாயம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2022-08-09 01:17 GMT

குமாரபாளையத்தில் செங்குந்த சமுதாயம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையை மாநில தலைவர் செல்வராஜ் வழங்கினார்.

குமாரபாளையத்தில் செங்குந்த சமுதாயம் சார்பில் 14ம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா, பள்ளி பி.டி.ஏ. நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாநில தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் உள்ளிட்ட உறுப்பினர்கள், பி.டி.ஏ. நிர்வாகிகள் சிவசக்தி சண்முகசுந்தரம், சீனிவாசன் ஆகியோருக்கு மாநில தலைவர் செல்வராஜ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி, மாணவ, மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகைகள் வழங்கி வாழ்த்தி பேசினார். இதற்கான ஏற்பாடுகளை கவுரவ தலைவர் நாராயணன், நகர தலைவர் தங்கராஜ், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் பிரபு, வெங்கடேசன், சுவாமிநாதன், கார்த்திகேயன், முருகேசன், உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News